அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 28 மே, 2025

அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

fitter-500x500-1%20(1)

அரூர், மே 28-

அரூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை augஸ்ட் மாதத்திற்கான பயிற்சிக்காக தற்போது நடைபெற்று வருகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற அரசுத் தளத்தின் மூலமாக கீழ்க்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:

  • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: கம்பியாள் (Wireman)

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்:

    • பொருத்துநர் (Fitter)

    • குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்பாடு தொழில்நுட்பவியலாளர் (Refrigeration and Air Conditioning Technician)

    • கம்மியர் (Welder)

    • தானியங்கி வாகன வர்ணம் பூசுதல் (Automobile Painting)

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • மாற்றுச் சான்றிதழ்

  • மதிப்பெண் சான்றிதழ்

  • சாதிச் சான்றிதழ்

  • கைபேசி எண்

  • மின்னஞ்சல் முகவரி

  • ஆதார் அட்டை

  • முன்னுரிமை சான்றிதழ் (தேவைப்பட்டால்)

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

விண்ணப்ப கட்டணம் ரூ.50/- ஆகும். இது டெபிட் கார்டு, ஜி-பே அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையத்தின் வழியாக நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

அரசு வழங்கும் இலவச நலவசதிகள்:

  • அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 உதவித்தொகை.

  • மாதம் ரூ.750 உதவித்தொகை (Stipend)

  • விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை மற்றும் மூடுகாலனி (ஷூ)

வேலை வாய்ப்பு: பயிற்சி முடித்த மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக நேர்காணல் (Campus Interview) வாயிலாக வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வயது வரம்பு:

  • பெண்களுக்கு: குறைந்தபட்சம் 14 வயது (அதற்குபின் வயது வரம்பு இல்லை)

  • ஆண்களுக்கு: 14 முதல் 40 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2025

தகுதியுடைய அனைத்து மாணவ, மாணவியர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிற்பயிற்சியில் சேர்ந்து எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்:

  1. 96003 59646

  2. 88254 38742

  3. 97517 25714

 

கருத்துகள் இல்லை:

Post Top Ad