தருமபுரி, ஆடவை (ஆனி) 06-
தருமபுரி மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குள் வாழும் மகளிரின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.10,000 மதிப்புள்ள மாவு அரைக்கும் இயந்திரங்களை வாங்குவதற்காக 50% சலுகை அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் (23.06.2025) ஆடவை (ஆனி) 09 முதல் (14.07.2025) ஆடவை (ஆனி) 30க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்/விதவை/கைவிடப்பட்டோர் எனும் சான்று, வயது, வருமான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப. தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக