தருமபுரி, மே 28-
தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையம் 2025-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ள பயிற்சிக்கான சேர்க்கைக்கு, 2025 மே 19 முதல் ஜூன் 13 வரை www.skilltraining.tn.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது மற்றும் கல்வித் தகுதி:
-
ஆண்கள்: 14 முதல் 40 வயதுக்குள்
-
பெண்கள்: குறைந்தபட்சம் 14 வயதிலிருந்தே, வயது வரம்பு இல்லை
-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்:
-
கம்பியாள் (Wireman – 2 வருடம்)
-
பற்றவைப்பவர் (Welder – 1 வருடம்)
-
-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்:
-
கோபா (COPA – 1 வருடம்)
-
கட்டடவரைபாளர் (2 வருடம்)
-
மின்பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் டீசல், இயந்திர வேலையாள் (1-2 வருடங்கள்)
-
நவீன தொழிற்நுட்பப் பிரிவுகள்:
-
Industrial Robotics & Digital Manufacturing Technician (1 வருடம்)
-
Mechanic Electric Vehicle (2 வருடம்)
-
Basic Designer & Virtual Verifier (2 வருடம்)
-
Advanced CNC Machining Technician (2 வருடம்)
-
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
இடமாற்றுச் சான்றிதழ்
-
சாதிச் சான்றிதழ்
-
ஆதார் அட்டை
-
கைபேசி எண்
-
புகைப்படம்
-
மின்னஞ்சல் முகவரி
-
ரூ.50/- கட்டணம் (Online மூலம் செலுத்த வேண்டும் – Debit/Credit Card, Net Banking, UPI)
அரசு வழங்கும் இலவச நலவசதிகள்:
-
மாதம் ரூ.750 உதவித்தொகை
-
இலவச பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடை
-
இலவச மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி
-
விடுதி வசதி (ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இருவருக்கும்)
-
தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை
தொடர்பு எண்கள்:
-
80986 63711
-
96886 75686
-
94990 55840
தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் உறுதியான அடித்தளத்தை அமைக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக