தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் என்ற தலைப்பில் உயர்கல்வித்துறை கல்லூரி மாணவர்கள் பள்ளி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட துவக்க விழா நடைபெற்றது இதில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மூலம் இளநிலை மூன்றாம் ஆண்டு இன்று மாணவ மாணவிகள் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர் மேலும் கல்லூரி முதல்வர் ப.கி. கிள்ளிவளவன் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் க. எழிலன் அவர்கள் மேற்பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக