Type Here to Get Search Results !

மஞ்சவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.49.84 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


பாப்பிரெட்டிப்பட்டி, நவம்பர் 12:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி உள்வட்டம், மஞ்சவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 349 பயனாளிகளுக்கு ரூ.49.84 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் வருவாய்த் துறை சார்பில் 51 பேருக்கு ரூ.40.08 இலட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு பட்டா மாற்ற ஆணைகள், 39 பேருக்கு ரூ.5.14 இலட்சம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. பழங்குடியினர் நலத்துறை சார்பில் 225 பேருக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 3 பேருக்கு ரூ.1.10 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் பொறியியல் துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.1.70 இலட்சம் மதிப்பில் பவர் வீடர் வழங்கப்பட்டதுடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு விசை தெளிப்பான் மற்றும் உயிரி உரம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.60,000 நலத்திட்ட உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.46,419 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மொத்தமாக ரூ.49,84,844 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய், வேளாண்மை, மீன்வளம், சுகாதாரம், மகளிர் நலத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூறியதாவது:

“மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பின்தங்கிய கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசு நலத்திட்டங்கள் மக்களின் வாசலுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றன. பெண்கள் கல்வி, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம், விவசாயிகளுக்கான மானியக் கடனுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களிடம் சென்றடைய வேண்டும்,” என தெரிவித்தார்.


அவர் மேலும், “மக்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த அரசின் நலத்திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்” என்றும் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. மு. கதிரேசன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி ரத்தினம், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பாத்திமா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு. சு. சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies