Type Here to Get Search Results !

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நடைபெற்றது.


பென்னாகரம், மார்ச். 05:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநரின் உத்தரவின்படியும், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் அம்பிகா அவர்களின் மேற்பார்வையிலும், பென்னாகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு அலுவலர் முனுசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர், ஊட்டமலை, ஒகேனக்கல், நல்லாம்பட்டி மற்றும் மஞ்சாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தீயைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படும் காரணங்கள், தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மாணவர்களின் புரிதலை மதிப்பீடு செய்ய 20 கேள்விகள் கொண்ட கேள்வித்தாள் வழங்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள் முனுசாமி, அசோக் குமார் உள்ளிட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Pennagaram #FireSafety #FireRescue #SchoolAwareness #TamilNews #LocalNews 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies