Type Here to Get Search Results !

சாய்வான மின் கம்பத்தை உடனே சரிசெய்த பையர்நத்தம் மின்துறை – விவசாயிகள் பாராட்டு.


பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 1 – 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் ஊராட்சியில், பட்டா நிலத்தில் சாய்ந்து இருந்த மின் கம்பம் குறித்து விவசாயி அளித்த மனுவுக்குப் பதிலாக மின்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தது. சில மணித்துளிகளிலேயே கம்பத்தை நேராக நிறுத்தி, மின்கம்பிகளை சீர்செய்து, பொதுமக்களும் விவசாயிகளும் பாராட்டியுள்ளனர்.


கடந்த மாதம் பெய்த புயல் மழையால், ஒரு மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தன. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் பணியாற்ற சிரமம் அனுபவித்தனர்.


இந்த நிலைமை குறித்து ஒரு விவசாயி பையர்நத்தம் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தார். உடனடியாக மின்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் மின்கம்பத்தை நேராக நிறுத்தி, கம்பிவடங்களை சரி செய்து மின்சாரம் பாதுகாப்பாகப் பரவுமாறு நடவடிக்கை எடுத்தனர்.


மனு அளித்த சில மணித்துளிகளிலேயே பிரச்சனை தீர்க்கப்பட்டதால், விவசாயிகளும் பொதுமக்களும் மின்துறை அலுவலர்களின் விரைவான சேவையை பாராட்டினர். "மக்கள் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த மின்துறை அலுவலர்களுக்கு நன்றி," என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies