Type Here to Get Search Results !

அரூரில் அனைத்து கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, நவம்பர் 04:

தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில், இந்தியா தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் SIR (Special Intensive Revision) சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் அரூர் NRV திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரூர் வட்டாட்சியர் மற்றும் அரூர் துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஆகியோர் கலந்து கொண்டு, SIR வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான செயல்முறை, பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்த விண்ணப்பங்கள் செய்வது குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக மாவட்ட துணை செயலாளர் சி. கிருஷ்ணகுமார், நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் ஆர். வேடம்மாள் (முன்னாள் எம்.எல்.ஏ), ஈ.டி.டி. செங்கண்ணன், கோ. சந்திரமோகன், வே. சௌந்தரராசு, எம். ரத்தினவேல், எஸ். சந்தோஷ்குமார், நகராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு. தமிழழகன், நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செல்வதயாளன், உதயசூரியன், ராசிதமிழ், பிரியங்கா ஆகியோரும் பங்கேற்றனர்.


அதேபோல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies