Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே மினி சரக்கு லாரியில் கடத்திய ரூ.3.9 லட்சம் மதிப்புள்ள 511 கிலோ குட்கா பறிமுதல் – காரிமங்கலம் போலீசார் அதிரடி.


காரிமங்கலம், அக்டோபர் 04, 2025:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனைச் சாவடி அருகே குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காரிமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், எஸ்.ஐ.க்கள் சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு மினி சரக்கு லாரி சோதனைச் சாவடிக்கு வந்தது. போலீசார் அதை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 39 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சோதனையில் மொத்தம் 511 கிலோ குட்கா, மதிப்பில் ரூ.3.9 லட்சம் எனப் பறிமுதல் செய்யப்பட்டது.


விசாரணையில், கர்நாடக மாநிலம் ஒப்பேலியை சேர்ந்த ரவி (44) என்பவர் அந்த வாகனத்தை ஓட்டி வந்ததும், அவர் பெங்களூரிலிருந்து சேலம், ஈரோடு, கோவை பகுதிகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்ய கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மினி சரக்கு லாரியையும் பறிமுதல் செய்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். டிரைவர் ரவி கைது செய்யப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார். காரிமங்கலம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை அந்தப் பகுதியில் பரவலாக பாராட்டப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies