தருமபுரி மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மகளிர் திட்டத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி வட்டம் சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உணவு திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் எம். ஜான்சி ராணி கலந்து கொண்டு, உணவு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சத்தான உணவுகளை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த வெண்ணிலா, ரேகா, துளசி, சிவகாமி, நந்தினி, அம்பிகா, அம்சவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #WomenSelfHelpGroup #SHG #FoodFestival #RuralDevelopment #TamilNews #LocalNews
📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்
Facebook: https://www.facebook.com/Thagadurkural
WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaoBeTI1CYoYYJHGr72R
.gif)

.jpg)