Type Here to Get Search Results !

காரிமங்கலநடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


காரிமங்கலம், ஆக. 22 | ஆவணி 6 -


காரிமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஸ்ரீ சாந்தி திருமால் மஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இம்முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசுத் துறைகளின் பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.


இந்த முகாமில், மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், பட்டா மாற்ற சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அரசு துறை அலுவலர்கள் தனித்தனி கவுன்டர்களில் அமர்ந்து மக்களின் மனுக்களை பதிவு செய்தனர். மக்கள் நலனுக்கான சேவைகள் வீட்டின் வாசலிலேயே கிடைத்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884