தருமபுரி, ஆகஸ்ட் 17, 2025 (ஆவணி 01) –
சிறப்பு அழைப்பாளர்களாக அரசு மருத்துவர் டாக்டர் ஹரிபாஸ்கரன் (தருமபுரி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி குருதி பிரிவு அரசு மருத்துவர் டாக்டர் அருண் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” என்ற நான்கு மாத தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மதுபோதை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனுடன், இரத்ததானத்தின் சமூக நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவ்வமைப்பு தொடர்ந்து இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில், நிர்வாகிகள், பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உள்பட பலர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். மொத்தம் 86 யூனிட் (அலகுகள்) இரத்தம் சேகரிக்கப்பட்டது. இரத்ததானம் செய்த அனைவருக்கும் குருதிக் கொடையாளர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.gif)

.jpg)
.jpg)