Type Here to Get Search Results !

தும்பலஅள்ளியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது – 30 பாட்டில்கள் பறிமுதல்.

Image Source : Google.com

காரிமங்கலம், ஜூலை 17 | ஆடி 01 -

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் சிறப்பு சோதனை நடத்தினர். காரிமங்கலம் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் திரு. பார்த்தீபன் அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த சோதனை நடவடிக்கையின் போது, தும்பல அள்ளி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு தாபா ஓட்டலின் பின்புறத்தில் அரசு மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. போலீசார் உடனடியாக மது விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுத்தனர். கைது செய்யப்பட்டவர் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (33) என்பவர் என தெரியவந்தது. அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.


அவரிடமிருந்து மொத்தம் ₹4,500 மதிப்புடைய 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சிவக்குமாருக்கு எதிராக தொடர்புடைய சட்டங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies