சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலைக்கு ரூ.326 கோடிக்கும் அதிகமாக வழங்கியது தமிழக அரசு – அமைச்சர் இரா.இராஜேந்திரன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 மே, 2025

சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலைக்கு ரூ.326 கோடிக்கும் அதிகமாக வழங்கியது தமிழக அரசு – அமைச்சர் இரா.இராஜேந்திரன்.


தருமபுரி மாவட்டம், மே 9:

தமிழ்நாடு அரசால் கடந்த நான்கு அரவைப்பருவங்களில் மட்டும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு ரூ.22.15 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாகவும், ரூ.326.84 கோடி மதிப்பில் கரும்பு கொள்முதல் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கதிரிபுரத்தில் இன்று (09.05.2025) கரும்பு நடவு வயல்களை நேரில் பார்வையிட்டு, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். விவசாயிகளுடன் கலந்துரையாடியும், விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பற்றி கேட்டறிந்தும், பரிந்துரைகள் வழங்கியிருந்தார்.


அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், சர்க்கரைத்துறை இயக்குநர் திரு. டி. அன்பழகன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி உள்ளிட்டோர் முன்னிலையில் இருந்தனர்.

ஆலையின் சிறப்பம்சங்கள்:

  • 01.10.1987 அன்று துவங்கப்பட்ட இவ்வாலை ஆண்டுக்கு 4.30 லட்சம் மெ.டன்கள் அரவைத் திறன் கொண்டது.
  • தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாய எல்லைப் பகுதிகளுடன் இயங்குகிறது.
  • 39,941 கரும்பு விவசாய அங்கத்தினர்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2024-25ஆம் ஆண்டில் 1,16,000 மெ.டன்கள் கரும்பு அரவையடைந்து, தமிழகத்தில் அதிகபட்சமான 10.43% சர்க்கரை கட்டுமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக ரூ.40.97 கோடி தொகை நிலுவையின்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகை விபரம்:

  • 2023-24: ரூ.5.91 கோடி
  • 2024-25: ரூ.4.05 கோடி (கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.349/- வீதம்)


அதேபோல கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளில் உச்சபட்ச பங்காதாயம் ரூ.28 வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP), கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் (KAVIADP) போன்ற திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவிப்புகள்:

  • விதைக்கரும்பு முளைப்புத்திறன் அறை (Germination Chamber) முதல் முறையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
  • கரும்பு டன் ஒன்றிற்கு வழங்கப்படும் தொகை ரூ.3500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மேலும் உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
  • விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல்பாடுகளும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad