தருமபுரி, மே 09:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ. அருண், சே.ச. அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் சமுதாய நலனில் ஈடுபட்டுள்ள முக்கியமான தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் 14.05.2025 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறும். இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, சிறுபான்மையினருக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும், அவை மக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பற்றியும் ஆலோசிக்கப்படும். மேலும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஆணையக் குழுவினரிடம் நேரில் தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு இதுவாகும்.
இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சிறுபான்மையினர் பிரதிநிதிகளும் செயல்பாடு சார்ந்த கருத்துகளைத் தெரிவித்துச் செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக