Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல ஆலோசனை கூட்டம் – மே 14ஆம் தேதி நடைபெறுகிறது.


தருமபுரி, மே 09:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ. அருண், சே.ச. அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் சமுதாய நலனில் ஈடுபட்டுள்ள முக்கியமான தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் 14.05.2025 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறும். இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்த சந்திப்பின் போது, சிறுபான்மையினருக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும், அவை மக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பற்றியும் ஆலோசிக்கப்படும். மேலும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஆணையக் குழுவினரிடம் நேரில் தெரிவித்துக் கொள்ளும் வாய்ப்பு இதுவாகும்.


இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சிறுபான்மையினர் பிரதிநிதிகளும் செயல்பாடு சார்ந்த கருத்துகளைத் தெரிவித்துச் செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884