16 வயது சிறுவன் மீது சாதியவழி தாக்குதல் என்ற புகாருக்குப் பின்னணி இதுதான்! - தருமபுரி மாவட்ட காவல்துறை விளக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 மே, 2025

16 வயது சிறுவன் மீது சாதியவழி தாக்குதல் என்ற புகாருக்குப் பின்னணி இதுதான்! - தருமபுரி மாவட்ட காவல்துறை விளக்கம்.


தருமபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்கரைக்கோட்டை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் (வயது 20) ஆகியோர் கடந்த 30.04.2025 அன்று இரவு கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றனர். இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பிறகு அதே நிலையத்தில் காற்று நிரப்ப விரும்பினர்.


இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் "காற்று நிரப்ப இயலாது" என கூறியதைக் கொண்டு, சிறுவர்கள் மற்றும் பங்க் ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியில், சிறுவன் மற்றும் அவரது நண்பர் தாக்குதலுக்குள்ளானதாகவும், 5 பேர் சேர்ந்து தங்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில், அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


மாற்றாக, பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கியதாகவும் கூறி, 16 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் மீதும் தனிப்பட்ட வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவிய "சாதிய அடிப்படையில் தாக்குதல்" என்கிற செய்திக்கு மறுப்பாக, இது சாதிய சம்பவம் அல்ல எனவும், இடத்தில் ஏற்பட்ட சாதாரண தகராறாக இருந்தது என்பதும் காவல்துறை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad