தருமபுரி மே. 3:
ஜேசிஐ தருமபுரி கிளையின் ஏற்பாட்டில் "கலெக்டருடன் காபி" என்ற சிறப்பு நிகழ்ச்சி நேற்று தருமபுரியில் சிறப்பாக நடைபெற்றது. ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் திரு. கீர்த்திவாசன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தனது நிர்வாக அனுபவங்களைச் சிறப்பாக பகிர்ந்தார்.
நிகழ்வின்போது, சமூக மேம்பாடு, திட்ட செயல்படுத்தல் மற்றும் நவீன நிர்வாக முறைகள் குறித்தும், ஒரு அதிகாரி எப்படி மக்களுடன் தொடர்பு கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதையும் விளக்கினார். சமீபத்தில் கோராபுட் மாவட்டம், சமூக மேம்பாட்டுக்கான சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவின் பிரதமர் அவர்களால் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விருதை நேரில் பெற்ற பெருமையையும் திரு. கீர்த்திவாசன் பகிர்ந்தார்.
இந்நிகழ்வு, சமூக சேவையும், தலைவர் செயல்முறைகளும் எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை இளைஞர்களுக்குத் தெளிவாகக் கூறும் நிகழ்வாக அமைந்தது. ஜேசிஐ தருமபுரியின் தலைவர் ஜே.சி. பாபு, செயலாளர் ஜே.சி. கணேஷ் மற்றும் முன்னாள் தலைவர்கள் ஜே.சி. ரவிகுமார், ஜே.சி. விஜயகுமார் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக