Type Here to Get Search Results !

தருமபுரி அருகே திம்மராயசுவாமி சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது – பசுகன்று தானம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தருமபுரி, மே 3:

தருமபுரி அருகே மல்லிகுட்டை கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பண்டையத் திம்மராயசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று (மே 2) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த கோவில், ஹிந்து சமய வைணவ மரபைச் சேர்ந்த வன்னியகுலம் ஜம்பு மகாரிஷி கோத்திரம், கோலாகோன்றி வம்சம் வழி மக்கள் வழிபடும் புனித தலமாகும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தக் கோவிலின் பாரம்பரிய பக்தர்கள் ஆவார்கள்.


முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற கங்கை பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை, மூலவர் திம்மராய சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதியம் 12.45 மணியளவில் மேல் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து உற்சவர் சுவாமி மற்றும் தமட்ட எருதுகள் கோயிலை வலம் வந்தன. விழாவில் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள், பசு கன்றுகளை கோவிலுக்கு தானமாக வழங்கி, தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஒழுங்கமைப்புகளை கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884