காரிமங்கலம் அருகே சொகுசு கார் விபத்து – இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

காரிமங்கலம் அருகே சொகுசு கார் விபத்து – இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம்


காரிமங்கலம், மே 22-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் இன்று நடந்த சோகம் ஏற்படுத்திய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிராத்தை சேர்ந்த தனியார் கல்லூரி ஆசிரியை மீனாட்சி (வயது 50), தனது மகள் ஜனனி (35), பேரன் சர்வேஸ் (5), பேத்தி ஸ்ரேயா (3) ஆகியோருடன், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன், பேர்ணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (48) என்பவரும் பயணித்தார்.


பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கார் காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி நெடுஞ்சாலையில் வந்தபோது, டிரைவர் காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


விபத்தில் காரில் இருந்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து தொடர்பான வழக்கை பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad