Type Here to Get Search Results !

சாக்கடையாக மாறிவரும் மழைநீர்; உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.


பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்டு ரோட்டிலிருந்து பட்டுக்கோணாம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 200மீட்டர் தூரத்தில் சாலை ஓரமாக  மலைகளிலிருந்து வரும் பழமையான நீர்நிலை ஓடைகளை காணப்படுகிறது, சாலையின் இருபுறமும் உள்ள விவசாயநில உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர், இது ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், வருவாய் வட்டார அலுவலர்களுக்கும் தெரிந்தே நடைபெற்றுவருகிறது.


தற்பொழுது பருவமழை காரணமாக பெய்துவரும் மழையினால் உருவாகும் நீரோடைகளில் வரும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கிநின்று அங்குள்ள குப்பைகளுடன் கலந்து சாக்கடைகளாக மாறிவருகிறது என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies