Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் 60 அடி உயர திமுக கொடி கம்ப கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம நபர்கள் போலீசார் தீவிர விசாரனை.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மொரப்பூர் மேம்பாலம் அருகில் 60 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. 


இதை தற்போதைய துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு கொடியேற்றி திறப்பு விழா செய்து  கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த கல்வெட்டை நேற்று இரவு மர்ம நபர்கள்  உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது குறித்து காரிமங்கலம் திமுக நகர செயலாளர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் பழனியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.


இதை அடுத்து மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சேதப்படுத்தப்பட்ட கல்வெட்டை பார்வையிட்டு நகர செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி சேர்மன் பி சி ஆர் மனோகரன், நகர பொருளாளர் ரகு, துணைச்செயலாளர் ரமேஷ் நிர்வாகிகள் சக்திவேல் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 


அதனை தொடர்ந்து கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது குறித்து நகர செயலாளர் சீனிவாசன் இன்று மாலை 5 மணிக்கு காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies