Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே மாங்கரை அரசு பள்ளி மாணவர்கள் தேன் பூச்சி கடித்ததால் 54 மாணவ மாணவிகள் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாங்கரை அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 727 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மதிய உணவு இடைவெளியில் உணவருந்த சென்னர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே இருந்த மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து உணவு அருந்தி வந்த மாணவர்களை கடித்தது. இதில்54 மாணவர்கள்  காயம் அடைந்தனர். 

காயம் அடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர் சிகிச்சை முடித்த மாணவர்கள் ஒவ்வொருவராக பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies