காரிமங்கலம் பேரூராட்சியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

காரிமங்கலம் பேரூராட்சியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை  அருகே அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.  அவர்களின்  தலைமையில் நடந்தது.


நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்  செந்தில்குமார்,  நகர செயலாளர் காந்தி, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் அசோகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளை சேர்ந்த 3825 அதிமுக உறுப்பிணர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அடையாள  அட்டையை வழங்கி பேசும் போது


அதிமுக ஆட்சியில் அடிதட்டு மக்களின் தேவைகளை அறிந்து குக்கிராமம் வரை  சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். பொதுமக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஓரே கட்சி அதிமுக என பேசியவர், தற்போது நடைபெறும் திமுக அரசானது மக்கள் நல திட்டங்கள் பற்றி சிந்திப்பதில்லை எனவும், பழுதான தார்சாலையை கூட சீரமைக்காத நிலைதான் உள்ளது வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற  தேர்தல்களிலும் அதிமுக பெருவாரியான வெற்றி பெற்று மீண்டும் அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார் என பேசினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, மாணவர் அணி செயலாளர் ரவிசங்கர், முன்னாள்  கூட்டுறவு வங்கி தலைவர் பொன்னுவேல், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad