Type Here to Get Search Results !

பாலக்கோடு அறிவு திருக்கோயில் மண்டபத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையம் அருகில் உள்ள அறிவு திருக்கோயில் மண்டபத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமனியன்,காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், வனிகர் சங்க தலைவர் முத்து, பொருளார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் தற்போது நடைபெற்று வரும்  குற்ற சம்பவங்களை கண்டறியவும், மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல்  தடுக்கவும், வணிகர்களும், பொதுமக்களும், தங்கள் கடை மற்றும் வீடுகளில் மூன்றாவது  கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும். 


தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்க கூடாது. 18 வயதிற்க்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது. சைபர் க்ரைம் மற்றும் வங்கி மோசடிகள் குறித்து 155 மற்றும் 200 , பெண்கள் பாதுகாப்பிற்க்கு 181, சிறுவர் பாதுகாப்பிற்க்கு 1098 ஆகிய ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணிற்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மேலும் பொருளாதார குற்ற தடுப்பு, போதை பொருள் தடுப்பதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து  ஆலோசனைகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் உதவி காவல் ஆய்வாளர்கள் கோகுல், முனிராஜ், மணி, வணிகர்கள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியபாரிகள் தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies