இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் சிறப்புரை ஆலோசனை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன்,மாவட்ட பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் BCR மனோகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து பேசியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைக் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம், கிராம புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் அதனை தொடர்ந்து பேசியவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை வென்றது போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும், வெற்றி பெற்று தர்மபுரி மாவட்டம், திமுகவின் கோட்டை என நிருபிப்போம் என பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கில் கோபால், முனியப்பன் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

