Type Here to Get Search Results !

பெரியாம்பட்டியில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி நெடுஞ்சாலை  வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறது. பால்சொசைட்டி பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதி வரை சாலையின் இரு புறமும் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையை ஆக்கிரமித்து  கழிவு நீர் கால்வாய், மற்றும்  வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளாக மாற்றி விட்டனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால்   சாலை குறுகிய அளவுடையதாக மாறியதுடன், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.


தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று  வந்த சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் அப்பகுதியினர்  ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி  மனு அளித்தனர். அதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி  பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, தலைமையில் ஆகஸ்ட் 22, வியாழக்கிழமை இன்று மதியம் 3 மணிக்கு போலீசார் பாதுகாப்புடன் பெரியாம்பட்டி நெடுஞ்சாலையின்  இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புக்களை பொக்லைன் எந்திரம் ‌மூலம் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies