இவ்விருதினை ஆலையின் செயலாட்சியர் திருமதி.R.பிரியா, தலைமை இரசாயனர் மற்றும் கணக்கு அலுவலர் ஆகியோர் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (14.08.2024) தலைமை செயலகத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து இவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் செல்வி.அபூர்வா, இ.ஆ.ப, சர்க்கரைத்துறை இயக்குநர் திரு.த.அன்பழகன் இ.ஆ.ப, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் திருமதி.R.பிரியா ஆகியோர் உடனிருந்தனர். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேசிய அளவில் விருது பெற்று சாதனை படைத்துள்ளது நமது மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)