Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரிமங்கலத்தில் அமைதி பேரணி.


முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்  6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரிமங்கலத்தில்  தருமபுரி மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது.

இது குறித்து தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை 7ம் தேதி  புதன்கிழமை காலை 10 மணியளவில், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் "அமைதிப்பேரணி" காரிமங்கலத்திலுள்ள திமுக மாவட்ட  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு  மொரப்பூர் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று இராமசாமி கோயில் அருகில் உள்ள  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்வில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட, ஒன்றியம், பேரூர், கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில்  பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதே போன்று  ஒன்றிய, பேரூர், கிளைகழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துமாறு தருமபுரி மாவட்ட தி.மு.க சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884