Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஜிட்டாண்டள்ளியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.

 


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சியர்  மேற்பார்வையில்,  உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை  இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மகேந்திர மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகேந்திரமங்கலம், ராயக்கோட்டை ரோடு, ஜிட்டாண்டள்ளி பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உடன் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்டோர் மளிகை கடைகள்,பெட்டி கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்த போது ஜிட்டாண்டள்ளி சின்னதப்பை இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.


அதன் அடிப்படையில் மகேந்திரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்களுக்கு பரிந்துரை அடிப்படையில்,  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்  அவர்கள்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த மளிகை கடை இயங்க தடை விதித்து, உடனடி அபராதம்  ரூபாய்.25000 விதித்து உத்தரவிட்டார். 


அதனை  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் திரு .அசோகன் இணைந்து  மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்ட கடை உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி ரூபாய். 25000 அபராதம் செலுத்திடவும் மேலும் 15 தினங்களுக்கு கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூடி விட்டு சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884