Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

எலங்காளப்பட்டி கிராமத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தாய் மகன் உட்பட 3 பேர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எலங்காளப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெயவேல் (வயது.38) இவருக்கும் இவரது அண்ணன் பச்சியப்பன் (வயது.50) இருவருக்கும் சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது,


இந்நிலையில் கடந்த 3ம் தேதி நேற்று முன்தினம் காலை ஜோதிவேல் அவரது மனைவி குமுதா (வயது.33) அவரது தாய் சந்திரா (வயது. 65) ஆகியோர் எலங்காளப்பட்டியில் உள்ள தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு வந்த பச்சியப்பன் அவரது மகன்கள் மணி (வயது. 26) வல்லரசு (வயது.24) ஆகியோர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன், காலால் எட்டி உதைத்தும், பிரேக் ஒயரால் அடித்தும் கடுமையாக தாக்கினர்.


இதில் படுகாயமடைந்த மூவரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இன்று பாலக்கோடு போலீசில் கொடுத்த  புகாரின் பேரில் போலீசார் பச்சியப்பன் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884