Type Here to Get Search Results !

பெரியாம்பட்டி சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம்  பெரியாம்பட்டி சமுதாய கூடத்தில் பெரியாம்பட்டி, கோயிலூர், பைசுஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட் முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன் நீலமேகம் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தமிழ்செல்வி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம், சமுக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட  தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். இம்முகாமில் இலவச மின்சாரம், பட்டா பெயர் மாற்ரம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வேண்டி பொது மக்கள் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் துணை பி.டி.ஓ.வீரபத்திரன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் முருகன், குமார், சரவணன், வார்டு உறுப்பிணர் காளியப்பன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies