Type Here to Get Search Results !

பொம்மனூர் தேசிய நெடுஞ்சாலையில் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி சாவு, மனைவி படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பழனிசாமி (வயது.40) இவரது மனைவி சத்தியா (வயது.35) இருவரும் ஓசூரில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த மாதம் 10ம் தேதி மாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி விபத்திற்குள்ளானதில் பழனிசாமியின் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமானார். அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் பழனிசாமியை  மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களுர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies