தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி, காமராஜ் நகர், புல்லு குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசி கொல்லன் கொட்டாய் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்மபுரி கிருஷ்ணகிரி செல்லும் பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலசண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாசில்தார் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக