பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜனவரி, 2024

பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்த பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் நலனைக்காக்க பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்கம் தொடங்கப்பட்டது, இந்த சங்கத்தின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் பேட்ரிக் அந்தோனி தலைமையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ஜெயந்தி, துணைத் தலைவர் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, மேலும் தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக கட்சியில் தலைவருமான மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் சீரமைப்புக்கு பணிக்காக மத்திய அரசு உதவிகள் செய்ய வேண்டும் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது, இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad