என் மண்
என் மக்கள் யாத்திரை அரூருக்கு வருகை தரும் மாநில தலைவரை வரவேற்க தொண்டர்கள் அணி திரண்டு வாருங்கள், மாநில செயற்குழு உறுப்பினரும் அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கே.சாமிக்கண்ணு அறிக்கை.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகமெங்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதையடுத்து ஜனவரி 8ம் தேதி மாலை 5மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு வருகை தந்து என் மண் என் மக்கள் யாத்திரையின் நாயகர் அண்ணாமலை அவர்கள் பொதுமக்களுடன் உரையாடுகிறார்.
எனவே மாநில தலைவரை வரவேற்க மாநில மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறோம் என மாநில செயற்குழு உறுப்பினரும் அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கே.சாமிக்கண்ணு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக