மாரண்டஅள்ளி பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜனவரி, 2024

மாரண்டஅள்ளி பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல்.


தர்மபுரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் இல்லாத வகையில் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள்  உத்தரவிட்டதன் பேரில் ,மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து கடைகளில் ஆய்வு செய்து  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, மேற்படி கடைகளுக்கு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்.,  உத்தரவின் பேரில் உடனடி அபராதம் மற்றும் கடை  இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கி கடையை மூடி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக நேற்றைய தினமும் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  மற்றும் மாரண்டஅள்ளி காவல் நிலைய சிறப்பு நிலை காவலர்கள் வினு மற்றும் சந்திரன் உள்ளிட்ட குழுவினர், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ,பேருந்து நிலையப் பகுதியில் ஒரு தேநீர் பீடா கடை, நான்கு ரோடு பகுதியில் ஒரு  பீடா கடை,  வெள்ளிச்சந்தை ரோடு பகுதியில் ஒரு மளிகை கடை , பஞ்சப்பள்ளி கவுனுர்ரோடு பகுதியில் ஒரு பெட்டி கடை மற்றும்  காளி கவுண்டன் கொட்டாயில் ஒரு மளிகை கடை என ஐந்து கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில்  மேற்படி கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை பரிந்துரையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் ஐந்து கடைகளுக்கும் தலா 5000 அபராதமும் கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ் வழங்கி கடையை மூடிட உத்தரவிட்டதன் அடிப்படையில் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் செலுத்த உரிய தலைப்பிலான சலான் ரசீது மற்றும் கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ்  வழங்கி கடையை மூடச் செய்து  மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து சென்றனர்.


மேலும் மாவட்ட நியமன அலுவலர் தன் அறிக்கையில், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, தீவிரப்படுத்தும் நோக்கில் இனி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் கடைகளுக்கு உடனடி 25 ஆயிரம்  மற்றும் கடை இயங்க தடை, உரிமம் ரத்து எனவும், இரண்டாம் முறை பிடிபட்டால் ஐம்பதாயிரம் அபராதம் நடவடிக்கை எடுக்க மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad