Type Here to Get Search Results !

பெரியமிட்டா அள்ளி மாந்தோப்பில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை சமாதானப்படுத்திய விவசாயி குத்தி கொன்ற வழக்கில் 2சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே  பெரியமிட்டாஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி சரவணன் (35) இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், அர்சணா (30) என்ற மனைவியும், ஆகாஷ் (3) பிரதிஷ் (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


இவரது விவசாயி நிலத்தில் உள்ள மாந்தோப்பில் நேற்று  மாலை வாலிபர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஒருவருக்கு ஒருவர்  தகராறில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி சரவணன், சண்டை போட்டுக் கொண்டிருந்த வாலிபர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். 



அப்போது  மதுபோதையில் இருந்த பிரகாஷ்  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் விவசாயி சரவணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இன்று  கத்தியால் குத்தி கொலை செய்த பன்னிஅள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (27)   என்ற வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மேல்கொட்டாய் கிராமத்தை  சேர்ந்த சாந்தகுமார் (வயது. 23), கோபிநாத் (வயது. 23), விக்னேஷ் (வயது.27), இளங்கோ (வயது. 25), வேடிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (வயது .23) கொத்தபெட்டகாலணியை சேர்ந்த முனியப்பன் (வயது. 21),   சீகலஅள்ளியை சேர்ந்த கார்த்திக்(வயது.19) மற்றும் 17 வயதுடைய  2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த விவசாயியை  கொலை செய்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884