Type Here to Get Search Results !

கொலசனஅள்ளி கிராமத்தில் பாமக கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்துள்ள கொலசனஅள்ளி மற்றும் வேப்பலஅள்ளி கிராமங்களில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் தருமபுரி மேற்கு மாவட்டம் பாமக சார்பில், பாமக கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய தலைவர் முருகேசன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட இணை செயலாளர் கவியரசன், சுகுமார், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் வரும் 8ம் தேதி மாரண்டஅள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் பாமக  வாக்குசாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் M.P அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளார், அதனை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் திரளான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies