தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று நபார்டு திட்டத்தின் மூலம் 2 கோடி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.gif)

