![]() |
| img src : seven.edu.vn |
தருமபுரி மாவட்டம் காவேரியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராமர் (வயது.70) விவசாயியான இவர் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது இவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், முதியவர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.gif)

