Type Here to Get Search Results !

காரிமங்கலம் பைசு அள்ளி கிராமத்தில் பட்டாசு வெடித்ததால் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அனைத்த ஊர் பொதுமக்கள்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே  பைசுஅள்ளி கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள் இன்று காலை பட்டாசு வெடித்து விளையாடி கொண்டிருந்தனர்.


அப்போது பட்டாசு தீ பொறி அருகில் உள்ள   சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் விழுந்து கரும்பு தோட்டம் தீ பற்றி  எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  ஒன்று சேர்ந்து தீயை அணைத்தனர். இதில் சிறிய அளவில் மட்டுமே கரும்பு தீயில் கருகியது.


உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies