Type Here to Get Search Results !

பிக்கனஹள்ளி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா நாளை நடைபெறுவதால் கலந்து கொள்ள பஞ்சாயத்து தலைவர் அழைப்பு.

பிக்கனஹள்ளி ஊராட்சியில் 10 இலட்சத்து 32 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா நாளை நடைபெறுவதால் கலந்து கொள்ள பஞ்சாயத்து தலைவர் அழைப்பு.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சியில்  10 இலட்சத்து  32 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா, தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்களின் தலைமையில் நாளை 31.10.2023ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்ச்சிக்கு  பிக்கனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பத்மாவதிசுப்ரமணி அவர்கள் முன்னிலை வகிக்கிறார், இதில் சிறப்பு விருந்தினராக  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் கலந்துக்கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். அது சமயம் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பிக்கனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் திருமதி. பத்மாவதி சுப்ரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies