Type Here to Get Search Results !

காரிமங்கலம் அடுத்த காட்டுசீகலஅள்ளி கிராமத்தில் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டேம் கால்வாய் மீது பாலம் அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த  காட்டுசீகலஅள்ளி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டேம் கால்வாய் மீது பாலம் அமைக்கும் பணிக்கு மாவட்ட கவுன்சிலர் காவேரி தலைமையில் பூமி பூஜை நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொண்ணுவேல், கவுன்சிலர் நாகம்மாள் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர. வக்கீல் பாரதி வரவேற்றார், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு  பூமி பூஜை செய்து பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் காந்தி,‌ அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம்,‌‌ கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சந்திரன், பெரியசாமி, முருகன் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர், 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies