Type Here to Get Search Results !

ஸ்ரீ அமிர்தேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விழா .


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலின்  அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீ அமிர்தேஸ்வரர்,  அன்னை  ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அமிர்தேஸ்வரர்க்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.



ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகைக்கு  அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  700க்கும்  மேற்பட்ட  பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் மயிலை மலையைசுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று  ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகை தரிசனம் செய்து வழிபட்டனர்.விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies