Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வெள்ளிசந்தை துனை மின் நிலையத்தில் 1.68 கோடியில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு..

வெள்ளிசந்தை துனை மின் நிலையத்தில் 1.68 கோடியில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளி சந்தை துணை மின் நிலையத்தில் 10 மெகாவாட்டில் இருந்து 16 மெகாவாட்டாக திறன் உயர்த்துதல் திட்டத்தை 1. கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பவர் டிரான்ஸ்பார்மரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ரிப்பன் வெட்டி ஸ்விட்ச் ஆன் செய்து புதிய பவர் டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


இந்த புதிய பவர் மின்மாற்றி மூலம் கனவன அள்ளி, மாரண்டஅள்ளி, கருக்கனஅள்ளி, நல்லூர், பெல்லு அள்ளி, சீரியம்பட்டி, கரகூர், பொப்பிடி, அத்திமுட்லு, பஞ்சப்பள்ளி பெரியானூர், ஆல்மாரப்பட்டி, குட்லான அள்ளி, கும்மனூர், நமாண்டஅள்ளி மற்றும் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 296 மின் நுகர்வோர் பயன் பெறும் வகையில் திட்டம் செயல்படும் என தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் வனிதா, சரவணன். உதவி செயற்பொறியாளர்கள் முனிராஜ், அழகுமணி, அருண்பிரசாத், ரமேஷ், மோகன்  மற்றும் பாலக்கோடு கோட்டத்தை சேர்ந்த உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884