Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை 14-வது வட்ட பேரவை கூட்டம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை 14-வது வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது, இதில் வட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் நவநீதகிருஷ்ணன் வட்ட துணை தலைவர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வட்ட து. தலைவர் ஆசைத்தம்பி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், வட்ட செயலாளர் அன்பழகன் அவர்கள் செயலாளர் அறிக்கை வாசித்தார், வட்ட பொருளாளர் அனுசுயா பொருளாளர் அறிக்கை வாசித்தார், மாவட்ட துணை தலைவர்  சண்முகம் அவர்கள் துவக்க உறை ஆற்றினார்.


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்  கோபிநாத்  தமிழ் பொது நூலக துறை மாநில தலைவர்  பிரபாகரன், ஜாக்டோ ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் மாரி கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்ட இணை செயலாளர் கணபதி தீர்மானங்கள் வாசித்தார், மாவட்ட துணை தலைவர் இளவேனில் அவர்கள் நிறைவுரை வழங்கினர், இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்,

  1. வாணியாறு மற்றும் வறட்டாறு அணையினை புணரமைத்து சுற்றுலா தளமாக அமைக்க கோரல்.
  2. 4 % அகவிலைப்படி உயர்வு முன்னாள் மாநில தலைவர் தோழர் சுப்பிரமணியன் மீது எடுத்துக்கப்பட்ட நடவடிக்கை இரத்து செய்து பணப்பலன் வழங்க கோரல்.
  3. சத்துணவு ஊழியர்களும் காலை சிற்றுண்டி வழங்க கோரல்
  4. சித்தேரி மலைகிராமங்களை சுற்றுலா தளமாக மாற்ற கோரல் 

தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை இந்த பேரவை வாய்லாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies