விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலா.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் ஆத்மா திட்டத்தின் சார்பாக  விவசாயிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற உழவர் தின விழாவிற்கு கலந்து கொள்வதற்காக  விவசாயிகளை உள்மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெற்ற வேளாண் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மற்றும் வேளாண்மை சார்ந்த அனைத்து துறை தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.

இதில் 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், இதற்கான, ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர்  சரவணன் உதவி தொழில்நுட்ப மேலாளர்  சண்முகம் ஆகியோர்கள் செய்திருந்தனர்.சுற்றுலாவில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மோகன் அவர்கள்.கலந்துகொண்டு விவசாயிகளுக்குவழி அனுப்பி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad