தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 50 தினமும் இயக்கப்பட்டு வருகிறது, இதில் நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும் பள்ளி-கல்லூரி பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பிட்ட வழித்தடமான 6- நம்பர் நகரப்பேருந்து காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி வழியாக காலை மாலை என இருவேளைகளிலும் மாணவிகள் பயணம் மேற்கொள்கின்றனர் வருகிறது.
இந்த வழித்தடத்தில் செல்லும் 6- நம்பர் பேருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு தள்ளு தள்ளு என்ற வடிவேலின் வசனத்திற்கு ஏற்ப மாணவிகளும் பொதுமக்களும் தள்ளும் நிலைமைக்கு இப்பேருந்து பலமுறை தள்ளப்பட்டுள்ளது- இதனால் மாணவிகள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இன்று காரிமங்கலம் நகர பகுதியில் சாலையின் நடுவே நின்ற பேருந்தை சகபயணிகள் தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக