ஒகேனக்கல், ஜூன் 5:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை, தருமபுரி வன மண்டலம், தருமபுரி வனக்கோட்டம், பென்னாகரம் வனச்சரகம், ஒகேனக்கல் வனச்சரகம், ஸ்ரீதேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மற்றும் மாங்கரை நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகளை நடத்தின.
இதன் முதல் நிகழ்வாக, ஒகேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, பென்னாகரம் முதல் ஒகேனக்கல் வரை உள்ள வனத்துறை சாலைப் பகுதிகளில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மூன்றாவது நிகழ்வாக, ஒகேனக்கல் வனச்சரக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், “மரம் வளர்ப்போம் – மழை பெறுவோம்”, “சுற்றுச்சூழலை காப்போம்”, “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் – பசுமை பூமியை உருவாக்குவோம்” என்ற முழக்கங்களை எழுப்பி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)