தருமபுரி, ஜூன் 3:
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் வகையில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 05.06.2026 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 2026 மாதத்திற்கான கூட்டம் 05.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பங்கேற்று விவசாயம் தொடர்பான கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்து பயன்பெறலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)